"லைக்' செஞ்சு, அன்பையும் 'ஷேர்' செய்தாளே.. இப்ப ஆளைக் காணோமே!"
சென்னை: பேஸ்புக்கில் தன்னுடன் அன்பொழுகப் பேசிய பெண்ணை பார்ப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து ஆளைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைந்த நபரைப் பிடித்த போலீஸார் அவருக்கு அறிவுரை கூறி ஊருக்கே அனுப்பி வைத்தனர்.
பேஸ்புக்கால் பலர் பித்துப் பிடித்து அலையும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. இந்த பேஸ்புக்கால் பலர் காதல் கொள்கின்றனர், அதனால் மோதல்களும், கொலைகளும் கூட நடக்கின்றன. பணம் பறிக்கும் மோசடிகளும் நடக்கின்றன.. நாலு நல்லது நடந்தால் 40 கெட்டதும் நடக்கிறது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் என்று தெரிய வந்தது.
அவர் போலீஸாரிடம் கூறுகையில், நான் பேஸ்புக் மூலமாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டேன். அவரைப் பார்க்கவே சென்னை வந்தேன். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு போலீஸார் அறிவுரை கூறினர். எச்சரிக்கையும் விடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications