கதிராமங்கலம்.. பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயராமனுக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
தஞ்சை: கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கிணறு அமைக்கும் பணிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பேராசிரியர் ஜெயராமனுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 9 பேருக்கு நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் கிணறுக்கான குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கடந்த ஜூன் 30-ஆம் தேதி எண்ணெய் குழாய் தீப்பிடித்ததால் பீதியடைந்த மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

அப்போது ஓஎன்ஜிசியின் பொருள்களை சேதப்படுத்தியதாகவும், போலீஸாரை தாக்கியதாகவும் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசியின் பொருள்களை சேதப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜெயராமன் ஏற்கெனவே ஜாமீன் பெற்றுவிட்டதால் மற்ற 9 பேருக்கு தஞ்சை நீதிமன்றம் நேற்றுநிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர்கள் 9 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் காவல் துறை மீதான தாக்குதல் வழக்குக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஜெயராமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவர் தினமும் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications