கந்து வட்டி கொடுமை... கலெக்டர் அலுவலகங்களில் தொடரும் தற்கொலை முயற்சி - தவிக்கும் போலீஸ்
கந்து வட்டி கொடுமையினால் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
திருச்சி: கந்து வட்டி கொடுமை காரணமாக திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தற்கொலை முயற்சிகள் தொடர்வதால் போலீசார் தவித்து வருகின்றனர்.
கந்துவட்டி கொடுமையினால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவுந்தப்பாடியை சேர்ந்த மனோன்மணி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார், மனோன்மணியை தடுத்து நிறுத்தினர்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் மலர்கொடி என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரூ.10,000 கடனுக்கு ரூ.3 லட்சம் பணம் திருப்பி கொடுத்தும் கடன் கொடுத்தவர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். பலமுறை புகார் அளித்தும் ஆட்சியர் ராசாமணி நடவடிக்கை எடுக்காததால் மலர்கொடி இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேட்டு என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எறையூரைச் சேர்ந்த அருந்ததியின் மக்கள் பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்க வந்திருந்தனர். ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களில் ஒருவராக சேட்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 வாசல்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழக காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications