காட்பாடி அருகே இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை போலீசார் கைது
காட்பாடி அருகே இரிடியைம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

வேலூர்: காட்பாடி பகுதியில் இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை மடக்கி பிடித்தது காவல்துறை தொடர்ந்து 6 மணி நேரம் விசாரித்து வருகிறது.
வேலூர்மாவட்டம்,கேவிகுப்பம் பேருந்து நிலையத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தசுமார் 10-க்கும் மேற்பட்டோர் சொகுசு கார்களில் வந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்.இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கேவிகுப்பம் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து கேவிகுப்பம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் கேவிகுப்பம் அருகேயுள்ள தேவரிஷிகுப்பத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை விற்கப்போவதாக கூறி இவர்களை இங்கு வரவழைத்துள்ளார். இவர்களும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் அதனை வாங்க இங்கு வந்துள்ளனர்.
சொகுசு கார்களில் வந்தவர்களை போலீஸார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதோடு அவர்களின் சொகுசு கார்களையும் சோதனையிட்டுள்ளனர். அப்போது காரில் 0-15 பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இரிடியத்தை சோதனை செய்யும் கருவியும் கதிர் வீச்சு தாக்காமல் இருக்க கோட்டும் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த குழுவில் காவல்துறையின் உதவி ஆணையர் மகனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேவரிஷிகுப்பத்திற்கு பாலமுருகனை தேடி சென்ற போது அவர் தப்பி தலைமறைவாகிவிட்டார்.
தொழிலதிபர்கள் உண்மையில் எதற்காக காட்பாடி வந்தார்கள் இரிடியம் வாங்கவா அல்லது சிலைக்கடத்தல் கும்பலா என முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கொத்தாக சிக்கியுள்ள இந்த கும்பலை விட்டுவிடாமல் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications