"ப்ளீஸ் காப்பாத்துங்க".. கையில் குளுக்கோஸுடன் ஊருக்குள் வந்த நபர்.. அலறி அடித்து ஓடிய கொடை மக்கள்
கொடைக்கானலில் போலீசார் கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்
கொடைக்கானல்: "ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று கையில் குளுக்கோஸ் பாட்டிலும் ஊருக்குள் சுற்றி வந்த நபரை பாரத்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு போனார்கள்..!
தமிழ்நாடு முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
அதனால்தான், கொடைக்கானலில் வழக்கமாக மே மாதம் இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி இந்த முறை ரத்தாகி உள்ளது.. இதனால் மிகபெரிய பொருளாதார இழப்பில் அந்த மாவட்டம் சிக்கி உள்ளது. அத்துடன், கொரோனா தொற்றும் அதிகமாகி உள்ளது.

இளைஞர்
இந்நிலையில், கொடைக்கானலில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அண்ணா சாலையில் இளைஞர் ஒருவர் கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி சுற்றி கொண்டிருந்தார்.. அந்த வழியாக நடந்து செல்வோரிடமும், பைக்கில் செல்வோரிடமும், "எனக்கு கொரோனா இருக்கு.. ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க" என்று சொன்னார்.. அதுமட்டுமல்லாமல், அந்த ரோட்டில் கடையில் உட்கார்ந்திருந்தவர்களிடமும் சொன்னார்.

பொதுமக்கள்
இளைஞர் இப்படி சொல்லியதுமே, அவருக்கு பின்னால் சில போலீசார் ஓடி வந்தனர்.. "அந்த நோயாளியை பிடிங்க.. விட்ருடாதீங்க".. என்று சத்தம் போட்டுக் கொண்டே வரவும், இதை கேட்டதும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓடினர்.. இதனால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தரிப்பு
இதையடுத்து, ஓட்டம் பிடித்த பொதுமக்களை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், தன் அருகில் வருமாறு அழைத்தார்.. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றும், கொரோனா நோயாளி போன்று சித்தரிக்கப்பட்ட இளைஞரை பார்த்து பயப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.. இதற்கு பிறகுதான் பொதுமக்களுக்கு உயிரே வந்தது.

அலட்சியம்
கொடைக்கானலில் இப்போது தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது, ஆனாலும் அதை அலட்சியப்படுத்திவிட்டு, நீங்கள் எல்லாம் இப்படி ரோட்டில் நடமாடினால் ஆபத்தில் முடியாதா? இதை உணர்த்தவே, இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம்... அதனால், யாரும் தேவையில்மல் வெளியே வர வேண்டாம்.. மாஸ்க் போடுங்க.. காலை 10 மணிக்கு மேல் ரோட்டில் யாரும் நடமாட கூடாது" என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications