ஆடி திருவிழாவில் கண் திறந்த அம்மன் சிலை... கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்ததாக கூறப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 3வது செக்கடி தெருவில் 24 மனை தெலுங்குபட்டி செட்டியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் 14ம் ஆண்டு ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி தட்கால் நடுதலுடன் விழா தொடங்கியது.

ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்து வருகிறது. இந்நிலையில் இரவு 8.30 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு கோயில் பூசாரி சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அம்மன் சிலை திடீரென கண் திறந்து பார்த்ததாக பூசாரிக்கு தோன்றவை அதனை அங்கிருந்த பக்தர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கோயில் அருகே திரண்டிருந்த பொதுமக்களும், பக்தர்களும் அம்மன் கண் திறந்த காட்சியை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். பெண்கள் அங்கேயே குலவையிட்டு வழிபாடு நடத்தினர். இந்த சம்பவத்தால் கோயிலில் பரபரப்பு நிலவி வருகிறது.
விநாயகர் சிலை பால் குடித்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல வேப்பமரத்தில் பால் வடியும் சம்பவங்கள் சில இடங்களில் நிகழும். அடிக்கடி பல கோவில்களில் அம்மன் சிலைகள் கண் திறப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இப்போது ஆடி திருவிழாவில் அம்மன் சிலை கண் திறந்தாக பூசாரி கூறியதால் முத்துமாரியன் கோவில் தற்போது திடீர் சுற்றுலாதலமாக மாறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications