குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா! பக்தர்கள் விரதம் தொடக்கம்
குலசேகரப்பட்டிணத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் தசரா திருவிழாவில் நேர்த்தி கடனை செலுத்த பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர்.
நெல்லை: குலசேகரப்பட்டிணத்தில் வரும் செப் 30ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்த விரதம் தொடங்கியுள்ளனர்.
மைசூருவுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக வேடம் அணிய விரதம் இருப்பர்.

இந்தாண்டு குலசேகரப்பட்டிண் தசரா விழா செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கோயிலில் கொடி ஏற்றப்படும். செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்பு அம்மன் கடற்கரை வாளகத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறார்.
இந்த விழாவை ஒட்டி வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்கினர். அவர்கள் காலையில் நீராடி விட்டு செவ்வாடை அணிந்து கோயிலுக்கு வந்து அம்மன் காலில் மாலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
பின்னர் மாலை சிறப்பு பூஜை நடத்தி கோயில் பட்டர் அந்த மாலைளை விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அணிவித்தார். விரதம் இருக்கும் பக்தர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் கோயிலிலோ அல்லது ஊரின் ஒதுக்குப்புறத்தில் குடிசை அமைத்து அங்கேயே சமைத்து ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடுகின்றனர்.
தசரா விழாவில் வேடம் அணியும் பக்தர்கள் யானை, புலி, குரங்கு, சிறுத்தை, பெண், பாதிரியார், சிவன், பார்வதி, நரசிம்மர், காளி, அனுமன், அரசியல் பிரமுகர்கள் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த வேடங்கள் அனைத்தும் ரூ.1000 முதல் ரூ.10000 வரை அங்குள்ள கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications