கனமழையால் பட்டியில் இருந்து வெளியேறிய 150 ஆடுகள் ரயில் மோதி பலியான பரிதாபம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரவு நேரத்தில் கனமழை காரணமாக பட்டியில் இருந்து வெளியேறிய சுமார் 150க்கும் அதிகமான ஆடுகள் ரயில் அடிபட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் திருவிடை மருதூர் அருகே விசுவநாதபுரம் உள்ளது. இக்கிராமத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த சந்தானம், கடலூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான சுமார் 350 செம்மறி ஆடுகளை வயல் வெளியில் மேய்த்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல மேய்ச்சலுக்குப் பிறகு ஆடுகளை வயல் வெளியில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சந்தானமும், கோபால கிருஷ்ணனும் தூங்க சென்றுவிட்டனர்.
நேற்றிரவு கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பட்டியில் இருந்து வெளியே வந்த ஆடுகள் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இருந்துள்ளது. அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இந்த ஆடுகள் மீது மோதியது.
இந்த விபத்தில் சுமார் 150 ஆடுகள் பலியானது. 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆடுதுறை வரை இழுத்து செல்லப்பட்டு தண்டவாளத்தின் இருப்புறங்களிலும் ஆடுகள் உயிரிழந்து கிடந்தது. பலியான ஆடுகளின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த சந்தானமும், கோபால கிருஷ்ணனும் பலியான ஆடுகளைப் பார்த்துக் கதறி அழுதனர்.
இந்த விபத்துத் தொடர்பாக ரயில்வே இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications