தென்காசியில் குடிநீர் கேட்டு மமக சார்பில் பாய்விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டம்!
குடிநீர் கேட்டு மமக சார்பில் படுத்து உறங்கும் போராட்டம் நடைபெற்றது.
நெல்லை: தென்காசியில் குடிநீர் கேட்டு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாய்விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சியாகும். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் குற்றாலம் குடிநீர் மற்றும் தாமிரபரணி நீரும் நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இங்குள்ள பெரும்பாலான வார்டுகளுக்கு வாரம் ஒரு முறை, மாதம் இருமுறை என்ற முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர தண்ணீர் வரவில்லை எனவும் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாய் விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டம் நடைபெற்றது.

அகமதுஷா தலைமையில் முன்னாள் கவுன்சிலர் சலீம் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாய் விரித்து வாசலில் படுத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு நகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு தண்ணீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications