கொடநாடு செல்ல திட்டமிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு வீட்டு சிறை
சென்னை: கொடநாடு சென்று முதல்வரின் வீட்டு முன்னர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தையுடன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி நந்தினி. தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து மதுக்கடைகளை மூடக் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மாணவி நந்தினி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் கொடநாட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, நந்தினியும் அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் புதன்கிழமை காலை கோத்தகிரியில் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோத்தகிரி காவல் துறையினர் நந்தினி, ஆனந்த் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு அங்கிருந்து குன்னூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு, அவர்களுக்கு காவல் துறையினர் உணவு அளித்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் இவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமையன்று இரவு விடுவித்தனர்.
இதுகுறித்து, நந்தினி செய்தியாளர்களிடம் கூறுகையில், திட்டமிட்டபடி வரும் நவம்பர் 1ம் தேதி கொடநாட்டில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். பூரண மதுவிலக்கை தமிழக அரசு அறிவிக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று கூறிய நந்தினி மதுரைக்கு திரும்பினார்.
இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சனிக்கிழமையன்று இரவு அவர் தன் தந்தையுடன் கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார் நந்தினி. இதுகுறித்து தகவலறிந்த புதூர் போலீஸார் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து வீட்டில் சிறை வைத்தனர்.
டாஸ்மாக்கை மூடக்கோரி போராட்டம் நடத்திய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications