முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவைதான்.. ஆனால் தமிழகத்தின் ஒத்துழைப்பு முக்கியம்... பினராயி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கு தமிழக அரசின் ஒப்புதலும் அவசியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி, அதற்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி கூறி வந்தது. சட்டசபையிலும் தீர்மானம் போட்டது. பூர்வாங்க வேலைகளையும் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது கேரளாவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயன், முல்லை பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. புதிய அணை கட்டுவதற்கான தேவை யில்லை என சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போஸ்டர்களும் ஒட்டினர்.

முல்லை பெரியாறு புதிய அணை குறித்து பினராயி விஜயனின் கருத்துக்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், விஜயன் தான் முன்னதாக தெரிவித்த கருத்துக்கு மாறாக புதியதாக கருத்தை வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவைக்கான பாராட்டு விழாயில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
நானோ தனது அரசோ முல்லைப் பெரியாறில் புதிய அணை தேவையில்லை என்ற கருத்து கொண்டவர்கள் அல்ல. புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. எனது அரசின் கருத்தும் அதுதான். ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இந்த பிரச்சினையில் தமிழகத்துடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. தமிழகத்துடன் நல்லுறவை பராமரிக்கவே விரும்புகிறோம். எனவே, பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கேரள அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் , முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்காக சர்வதேச நிபுணர்கள் குழுவைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு கேரள அரசு தனது திட்டத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications