ஜெயலலிதா மறைவு.. டாஸ்மாக்கில் கொடி கட்டிப் பறந்த மது விற்பனை… கலெக்டர் விசாரிக்க கோரிக்கை
நெல்லை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விடுமுறை விடப்பட்ட நாளில் மது விற்பனை கொடி கட்டிப் பறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கலெக்டர் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 194 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கிறது. இந்நிலையில், மறைந்த ஜெயலலிதாவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நெல்லை புறநகர் பகுதியில் உள்ள சில டாஸ்மாக் கடைகள் ரகசியமாக திறக்கப்பட்டு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதற்கு கைமாறாக கடை ஊழியர்களுக்கு ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் ரூபாய் வரை கைமாறியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நெல்லை, அம்பை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகா பகுதியில் மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது. இதனை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
இப்படி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து விபரீதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பேற்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகி்ன்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்த பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications