நீலாங்கரை காவல்நிலைய விசாரணை கைதி மர்ம மரணம்: அடித்து கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு!
நீலாங்கரை காவல்நிலைய விசாரணையில் இருந்த கைதி மர்ம மரணம் அடைந்துள்ளார்.
சென்னை: நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும் கைதியை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதால், இது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் கோரப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் அந்தோணி 22, என்பவர் மீது திருட்டு, கொள்ளை உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் இவரை வீட்டில் பெற்றோர் சேர்த்து கொள்வதில்லை. எனவே, திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணின் வீட்டிலேயே அந்தோணி இருந்து வருகிறார்.

இந்தநிலையில் மீண்டும் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளாய், தங்களுடன் வந்து எடுத்து கொடுக்குமாறு கூறி, அவரை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது வழியில், திடீரென அந்தோணிக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியதையடுத்து போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தோணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தகவலறிந்து வந்த உறவினர்கள் அந்தோணி இறப்பில் மர்மம் உள்ளதாகவும், போலீசார் விசாரணையின்போது தாக்கியதால்தான் அந்தோணி இறந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து அந்தோணி மரணம் தொடர்பாக மாஜிஸ்ட்டிரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணையில்தான் அந்தோணி எவ்வாறு இறந்தார் என தெரிய வரும் என்றும் அதன்பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications