முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு நடைபயணம்... ஸ்டாலின் அறிவிப்பு!
ஏப்ரல் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்புக்கான நடைபயணம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : ஏப்ரல் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்புக்கான நடைபயணம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்துக்கட்சி தலைவர்கள் இந்த போராட்டத்தில் எந்த வகையில் பங்கேற்கலாம் என்பதை நாளை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருமண மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது : உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் முழுஅடைப்பை நடத்துவது என முடிவு செய்து அந்த முழுஅடைப்பு போராட்டம் மிகப்பெரிய அளவிலே நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படி ஒரு முழு அடைப்பை பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆதரவளித்தவர்களுக்கு நன்றி
முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய அளவில் 100க்கு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. முழுஅடைப்பிற்கு ஒத்துழைப்பு தந்துள்ள பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும், மாணவர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அமைப்புகள் என போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நான் எனது நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
இன்று மாலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடப்பதாக இருந்தது. இன்று அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்று வரும் மறியல் போராட்டத்தால் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும் பொதுஇடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று நடப்பதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.

ஏப்ரல் 7ல் நடைபயணம்
ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்தபடி காவிரி உரிமை மீட்புப் பயணம் டெல்டா மாவட்டத்தில் தொடங்குவதாக முடிவு செய்தோம். இதன்படி ஏப்ரல் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்குகிறோம். இந்த நடைபயணமானது திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடிவடைய திட்டமிட்டுள்ளோம்.

அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
இந்த நடைபயணத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் எந்த நிலையில் பங்கேற்பது எந்தெந்த வகையில் அவர்களின் பங்களிப்பை அளிக்கலாம் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்பட உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு நாளை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications