"மகாராஜ்" திடீரென இறந்தது எப்படி... காரணத்தைக் கண்டுபிடிக்க கொங்கு நாடு ஜனநாயக கட்சி வலியுறுத்தல்!
சென்னை: கோவை அருகே மதுக்கரையில் பிடிக்கப்பட்ட காட்டுயானை என்ன காரணத்தால் உயிரிழந்துள்ளது என்பதை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து, யானையின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுக்கரை பகுதியில் ஊருக்குள் சுற்றித் திரிந்த யானை பிடிக்கப்பட்டு வரகளியாறு யானைகள் முகாமுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அந்த யானை உடல் நலக் குறைவு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதாலேயே யானை உயிரிழந்தது என வனவிலங்கு ஆர்வலர்ககள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மதுக்கரை வனத்துறையினரால் மயக்கஊசி செலுத்தப்பட்ட காட்டுயானை, டாப் சிலிப்பில் உள்ள வரக்களியாறு முகாமில் நேற்று உயிரிழந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மாங்கரைப் பகுதியில் மயக்கமருந்து செலுத்தப்பட்ட யானை பள்ளத்தில் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நஞ்சன் என்ற யானை போதிய மருத்துவ சிகிச்சையின்றி உயிரிழந்தது.
அதேபோல போதிய அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் பற்றாக்குறையால் மனிதர்களை தாக்கும் புலி,கரடி போன்றவை சுட்டுக்கொல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
அது மட்டுமின்றி வேலிகள், ரயில் தண்டவாளங்கள்,கிணறுகள் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவற்றால் விலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகள் உயிரிழப்பு போர்க்கால அடிப்படையில் தடுக்கப்பட வேண்டும்.
தற்போது உயிரிழந்துள்ள காட்டுயானை என்ன காரணத்தால் உயிரிழந்துள்ளது என்பதை கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து, யானையின் உடலை பரிசோதனை செய்து, உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு நாகராஜ் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications