எய்ம்ஸை யார் கொண்டு வந்தா என்ன.. மதுரைக்கு மகிழ்ச்சிதான்... செல்லூர் ராஜுக்கும்தான்!
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தமிழக அரசுதான் காரணம் என செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனையை யார் கொண்டு வந்தாலும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு முழுக்க முழுக்க காரணம் மத்திய பாஜகதான் என்று தமிழிசை சவுந்தராஜன் நேற்றைய தினம் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது பற்றி பிற கட்சிகள் 1% கூட உரிமை கொண்டாட முடியாது என்றும் தமிழிசை அப்போது தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, விளாச்சேரியில் நடைபெற்ற பரிதிமாற் கலைஞரின் 148-வது விழா பங்கேற்க வந்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், ஊர் கூடி தேர் இழுத்ததால்தான் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளதாகவும், இதனை யார் கொண்டு வந்தாலும், அதனை மதுரைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சிதான் என்றார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுவதால், எய்ம்ஸை கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் சொல்வதில் எந்த தவறுமில்லை என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு அதற்காக பிரதமர் மோடிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பா.ஜ.க. மட்டுமே இதனை கொண்டு வந்தது என்றால் 2003-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, எய்ம்ஸ் தற்போது வந்ததற்கு தமிழக அரசின் முயற்சியே காரணம் என்றும், இதில் தமிழக முதல்வருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் பங்கு உண்டு என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications