கிரானைட் கொள்ளை: நரபலி எலும்புக்கூடுகள் மேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
மதுரை: மதுரை மாவட்டம் பிஆர்பி கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக கண்டெடுக்கப்பட்ட 5 எலும்புக்கூடுகளை மேலூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டதை அடுத்து அவை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் மோசடி நடந்ததாக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, அவரையே சட்ட ஆணையராக நியமித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழவளவைச் சேர்ந்தவரும், பி.ஆர்.பி. நிறுவன முன்னாள் ஓட்டுநருமான சேவற்கொடியோன் சகாயத்திடம் அளித்த புகாரில், ‘மனநலம் பாதித்த இருவரை பி.ஆர்.பி. நிறுவனத்தினர் நரபலி கொடுத்து சடலங்களை இ.மலம் பட்டி குவாரி அருகே புதைத்துள்ளனர். அந்த இடத்தை அடை யாளம் காட்டத் தயார்' என்று கூறியிருந்தார்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இ.மலம்பட்டி ஊராட்சி சின்னமலம்பட்டி குவாரி அருகே, சேவற்கொடியோன் சுட்டிக்காட்டிய இடமான பிஆர்பி குவாரிக்குள் 9 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் 4 எலும்புக் கூடுகள் சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 5 எலும்புக் கூடுகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அவற்றையும் ஆய்விற்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என கீழவளவு போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து 5 எலும்புக்கூடுகளையும் மேலூர் நீதிமன்றத்திற்கு புதன்கிழமை கொண்டு வர மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி நேற்று உத்தரவிட்டார். அதன்படி அந்த எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவை சென்னைக்கு மரபணு சோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications