ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மோசமடைந்து வரும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள்
ஜி.எஸ்.டி வரி குறைக்காவிட்டால் தீப்பெட்டி ஆலைகளை மூடப்போவதாக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி : ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைகளை மூட அனைத்து தீப்பெட்டி நிறுவன உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், கடலையூர், கழுகுமலை மற்றும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சிறிய மற்றும் பெரிய ஆலைகளும், பகுதி நேர ஆலைகளும் அடங்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு பகுதிநேர தீப்பெட்டி மற்றும் முழுநேர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஒரே வரியாக 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இது அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் லாரி வாடகை, தொழிலாளர் கூலி, மூலப்பொருட்கள் விலை உயர்வால் தீப்பெட்டி தொழில் தள்ளாடி வருகிறது.
இதையடுத்து பகுதி நேர தீப்பெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட முடிவின் அடிப்படையில், அரசு ஜிஎஸ்டி வரியை பல பொருட்களுக்கு குறைத்துள்ளது.
இதிலும் தீப்பெட்டிக்கு தொழிலுக்கு வரிச்சலுகை வழங்கப்படவில்லை. இனி அடுத்து வரும் கவுன்சில் கூட்டத்தில் தீப்பெட்டி தொழிலுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் நிறுவனங்களின் சாவியை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் ஓப்படைக்க தீப்பெட்டி நிறுவன உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பது அதிகாரிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications