மதிமுக கூட்டணி சேரும் கட்சி தோற்கிறதா?... வைகோ சொன்ன பதில் இது தான்!
மதிமுக கூட்டணி சேரும் கட்சி தோற்கிறதா என்பதற்கு இதன் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : மதிமுக கூட்டணி சேரும் கட்சி தோல்வியை சந்திப்பது குறித்து அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்கள் எளியவனான தன்னை நிந்திப்பதாகவும் அதைப்பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் அவர் பற்றி வலம் வரும் கேலிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வைகோ, சமூக வலைதளங்களில் அதிகமாக நிந்திக்கப்படுகிறவனும், விமர்சிக்கப்படுகிறவனும் நான் தான்.
சிலர் திட்டமிட்டுக் கொண்டு என்னை கேலி செய்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி வருகின்றனர். இந்த எளியவன் வந்து பிரச்சாரம் செய்தால் தான் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று கருணாநிதி நீதிமன்றத்தில் வந்து எனக்காக காத்திருந்தார்.

61 நாட்கள் சிறப்பான பிரச்சாரம் செய்திருக்கிறேன்
2 முறை என்னை சிறையில் வந்து அவர் இது தொடர்பாக சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். 61 நாட்கள் தமிழகம் முழுவதும் இந்த கறுப்பு துண்டுக்காரன் பிரச்சாரம் தான் 40 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை தேடித் தந்தது என்று இந்து நாளேடு சிறப்பு செய்தியை பிரசூரித்திருந்தது. இந்த கறுப்புத் துண்டு தான் 40 தொகுதிகளிலும் வெற்றி தேடித் தந்தது. 1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது அந்த கூட்டணி வெற்றி பெற்றது, 1999ல் திமுகவுடன் நாங்கள் தேர்தல் கூட்டணி வெற்றி பெற்ற போது அப்போதும் வெற்றி பெற்றது.

பிரச்சாரத்தால் திமுக ஜெயித்துள்ளது
திமுகவில் எளியவனான நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த போது தான் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றியை பெற்றத் தந்தேன் என்று கருணாநிதி என்னை தனியாக அழைத்து பாராட்டினார். நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தத போது தான் முதன்முதலில் திமுக ஆட்சிக்கு வந்தது.

பொருட்படுத்தவில்லை
என்னை நிந்திக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் சொல்வதை நான் பொருட்படுத்தவில்லை. நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கொள்கைகள், லட்சியங்களுக்காக நேர்மையான அரசியல்வாதியாக இருக்கிறேன்.

வன்மத்துடன் செயல்படுகின்றனர்
நான் கொள்ளைகளில் உறுதியாக இருப்பதால் தான் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். என் மீது வன்மம் வைத்துக் கொண்டு சிலர் இது போன்று சமூக வலைதளங்களில் செயல்படுவதை நான் பொருட்படுத்தவில்லை என்று வைகோ தெரிவித்தார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications