இனி பாரத் மாதாகீ ஜெ கோஷம் கிடையாது.. பாரத் 'மாடு' கீ ஜெ தான்...!!
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பதை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
மிருகவதைக்கு எதிராக மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்தது. அதன்படி நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்றுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுவரவும் அரசு தடை விதித்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பைக் கண்டித்து நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
|
வைக்கோல் யார் தருவார்
மாட்டை விற்கவில்லை ஆனால் வைக்கோல் யார் தருவார்... எனக் கேட்கிறார் இந்த நெட்டிசன்..
|
வெங்காயத்தால் வாஜ்பாய்
வெங்காயத்தால் வாஜ்பாய்... மாட்டால் மோடி.... என்கிறார் இந்த வலைஞர்...
|
பாரத் மாடு கீ ஜெ
இனி பாரத் மாதாகீ ஜெ கோஷம் கிடையாது... பாரத் மாடு கீ ஜெ தான் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நாய வெட்டி போட்டுருவானுங்க...
ரோட்டுகடையில சிக்கனுக்கு பதில் மாட கொடுப்பானுங்க ..
இப்ப மாட நிப்பாட்டிட்டா நாய வெட்டி போட்டுருவானுங்க... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அசைவத்திற்கு பெரும் பங்கு..
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள இந்த நாட்டில் ஏழை மக்களுக்கு பயன் தரும் மீன், கோழி ,ஆடு ,மாடு போன்ற அசைவம் உணவு பெரும் பங்குண்டு...












Click it and Unblock the Notifications