விவசாயிகளின் போராட்டத்தை முன்வைத்து வாட்ஸ் அப்பில் உலா வரும் "படித்ததில் வலித்தது"
டெல்லியில் போராடும் விவசாயிகளின் வேதனையை வெளிக்காட்டும் விதமாக வாட்ஸ் அப்பில் உலா வரும் "படித்ததில் வலித்தது".
சென்னை : தமிழகத்தில் 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டதன் விளைவாக நூற்றுக்கணக்கான விவசாயம் பாதிக்கப்பட்டது. பச்சைபசேலென காட்சியளித்த விளை நிலங்களில் கருகி நின்ற பயிர்களைக் கண்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயினர்.
விவசாயிகளின் தற்கொலைகைளைத் தடுக்க விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ள தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
35வது நாளாக இன்ற நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்றைய விவசாயிகளின் கடுமையான நிலைமையையும், தங்களின் கோரிக்கையையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறுவது போலவும். எதையும் ஏற்கமுடியாது தமிழ்நாட்டுக்கே செல்லுங்கள் என்று சாட்டையால் அடித்து சொல்வது போலவும் சித்தரித்து போராட்டம் நடத்தினர்.
அரை நிர்வாண, முழு நிர்வாணப் போராட்டம் என விவசாயிகள்படும் இன்னலை விவரிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் எப்போதும் உலா வரும் படித்ததில் பிடித்தது இன்று படித்ததில் வலித்தது என்று வெளியாகியுள்ளது. அதன் விவரம்:
படித்ததில் வலித்தது
தன் வயலில் உள்ள
பொம்மைக்கே உடையிட்டு அழகிட்டவன்
நிர்வாணமாய் திரிகிறான்
சொந்த தேசத்தில்..
* மரத்துப்போன மனிதரின் கவனத்துக்கு