அப்பாடா! ஒரு வழியா தேதி குறிச்சாச்சு! வரும் 29 ஆம் தேதி மெட்ரோ ரயிலை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா..
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவடைவதையடுத்து வரும் 29-ந்தேதி மெட்ரோ ரயிலை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.
உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்துபோக்குவரத்து தொடங்க அனுமதி சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications