அப்பாடா! ஒரு வழியா தேதி குறிச்சாச்சு! வரும் 29 ஆம் தேதி மெட்ரோ ரயிலை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா..

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் முடிவடைவதையடுத்து வரும் 29-ந்தேதி மெட்ரோ ரயிலை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

chennai metro rail

முதற்கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.

உயர் அதிகாரிகள் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்துபோக்குவரத்து தொடங்க அனுமதி சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து மெட்ரோ ரயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்த்து முடிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+