கர்நாடகா துரோகம்! 61-வது முறையாக திறக்கப்படாத மேட்டூர் அணை! கலக்கத்தில் காவிரி டெல்டா விவசாயிகள்!
மேட்டூர்: காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கான உரிய பங்கை கர்நாடகா திறந்துவிடாமல் துரோகம் செய்வதால் மேட்டூர் அணை வறண்டு போய் கிடக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இன்று திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படுகிற காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு பாசனத்துக்கு திறந்துவிடப்படும். மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்தால் பண்ணவாடி நந்தி சிலை உள்ளிட்டவை வெளியே தெரியும்.

பொதுவாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவு தற்போது இல்லை. இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியில் இருந்து 43.51 அடியாக சரிந்தும்விட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் 404 கன அடியாக மட்டுமே இருக்கிறது. அணையின் நீர் இருப்பு வெறும் 14 டிஎம்சி நீர்தான்.
கர்நாடகாவின் துரோகத்தால் மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 61-வது முறையாக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
இதனால் காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களின் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலத்தின் பாசனமும் கேள்விக்குறியாகி நிற்கிறது..
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு காவிரி நீர் திறப்பது வழக்கமான நடைமுறை. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியதாக இருந்தால் 230 நாட்களுக்கும் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கஆன நீரைத் திறந்துவிட முடியும். தற்போதைய நிலையில் 1 டிஎம்சி நீரை திறந்துவிட்டாலே கூட 90 நாட்களுக்குதான் காவிரி டெல்டா பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இதனால் இன்று மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications