குருமூர்த்தி அவதூறாக பேசி இருந்தால் நடவடிக்கை... எரிமலையாக வெடிக்கும் ஜெயக்குமார்!
முதல்வர், துணை முதல்வர் குறித்து குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பதில் அவதூறு கருத்து இருந்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என
Recommended Video

சென்னை : முதல்வர், துணை முதல்வர் குறித்து குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பதில் அவதூறு கருத்து இருந்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குருமூர்த்தி சொன்னதில் அவதூறு கருத்து இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து மிகக்கடுமையான விமர்சனத்தை துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பதிவிட்டுள்ளார். குருமூர்த்தியின் இந்த கருத்துக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தொலைக்காட்சிகளுக்குத் தனித்தனியே பேட்டியளித்தார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், டுவிட்டர் என்பதை நல்ல கருத்துக்காக பயன்படுத்த வேண்டும். மாண்புமிக்கவர்கள், கற்றறிந்தவர்கள் செய்கின்றன வேலையும் அது தான். டுவிட்டரில் இது போன்று கொச்சைபடுத்துகின்றன, இகழ்ச்சியை ஏற்படுத்துகின்றன வேலைகளை செய்யக் கூடாது. சொல்லப்போனால் புறம்போக்குகள் செய்கின்ற வேலையை இதில் செய்யக் கூடாது. புறம்போக்குகள் தான் அந்த வேலையை செய்வார்கள்.

நடவடிக்கை எடுக்கப்படும்
டுவிட்டர் என்பது எல்லோரும் படிக்கக் கூடியது அதில் விஷயங்களாக இருந்தால் தான் எல்லோருக்கும் அழகு. "யாகாவராயினும் நாகாக்க" என்பதே அழகு. இதில் நிச்சயமாக அவதூறான கருத்துகள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை, இது குறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.

இப்படியா பேசுவாரு?
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பின் போது குருமூர்த்தியை ஜெயக்குமார் வசைபாடினார்.
பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொள்பவர் இப்படி ஒரு வார்த்தையை பிரயோகிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

குருமூர்த்தி ஆண்மை இல்லாதவராக இருக்கலாம்
குருமூர்த்தி வேண்டுமானால் ஆண்மை இல்லாதவராக இருக்கலாம். ஆனால் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் அனைவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை ஆண்மைத் தன்மையோடு கட்டி காத்து வருகிறோம்.
|
ஜெயக்குமார் பதிலடி
சொல்லப்போனால் காங்கேயம் காளை போல அதிமுகவை ஒன்றரை கோடி பேரும், நிர்வாகிகளும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குருமூர்த்தியின் குற்றச்சாட்டிற்கு ஜெயக்குமார் பதிலளித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications