கருணாநிதி நினைவிட பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: செல்லூர் ராஜூ
கருணாநிதி நினைவிட பிரச்சனையில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video

திருச்சி: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த கருணாநிதிக்கு இடம் கேட்டு முதலமைச்சரிடம் கெஞ்சினோம் என்று அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"அதிமுகவுடன் திமுகவை ஒப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல. அரசியல் முதிர்ச்சியற்றவர் ரஜினிகாந்த். நேரத்துக்கு, நேரம் மாறுபட்டு பேசக் கூடியவர். அதிமுக தொண்டர்களும், திமுக தொண்டர்களும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள். இரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கொள்கை உள்ளது. திமுகவும், அதிமுகவும் சந்திரன், சூரியன் போன்றது. எம்ஜிஆர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளின் காரணமாகவே அதிமுக உருவானது. திமுகவால் அதிமுக உருவானதாக கூறுவது ஏற்புடைய கருத்தல்ல.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க திமுக கோரியது. ஆனால், சட்ட சிக்கல்கள் இருந்ததால் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட 2 வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருந்தது. இரவோடு இரவாக வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் மூலம் பணிகளை விரைவுபடுத்தி மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ராஜாஜி அரங்கம் ஒதுக்கியது. 7 நாள் அரசு துக்கம் அறிவித்தது. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது என சகல அரசு மரியாதைகளும் கருணாநிதி மறைவுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், கருணாநிதி மறைவை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கீழ்த்தரமான அரசியலை நடத்தி வருகிறார்.
திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும். அழகிரியின் அரசியல் பணி குறித்து மதுரையில் உள்ள எனக்கு நன்கு தெரியும். அழகிரியின் திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு ஆகியவை எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, எம்பிகள் டி.ரத்தினவேல், ப.குமார், எம்எல்ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி உள்பட பலர் உடன் இருந்தனர்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications