ஜெ. மரணம்: யாரையோ திருப்திபடுத்த ராம மோகன ராவ் பொய் சொல்கிறார்.. அமைச்சர் தங்கமணி பரபர
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தான் உடன் இருந்ததாக ராம மோகன ராவ் கூறுவது உண்மையல்ல என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தான் உடன் இருந்ததாக ராம மோகன ராவ் கூறுவது உண்மையல்ல என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை ஆணையத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த வாரம் ஆஜரானார். அப்போது, அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமமோகன ராவ், விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்ததாக கூறினார். அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது காவிரி விவகாரம் தொடர்பாக 2 மணி நேரம் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

கமிஷனில் தகவல்
மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர் என்றார்

அவர் பொய் சொல்கிறார்
இந்நிலையில் ராம மோகன ராவின் இந்த பேச்சுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராம மோகன ராவ் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு என்றார்.

யாரையோ திருப்திபடுத்த
உயரதிகாரி பொறுப்பில் இருந்த ஒருவர் பொய்யான குற்றச்சாட்டை கூறியது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். யாரையோ திருப்திபடுத்தவே உயரதிகாரியாக இருந்தவர் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்றும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கவில்லை
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தான் ராசிபுரத்திலும் அமைச்சர் வேலுமணி வேலூரிலும் இருந்ததாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க ராம மோகன ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications