தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா?..நீதி கேட்கும் பேரணியில் ஸ்டாலின் பேச்சு
கடலூர் : 4 ஆண்டாக மக்களுக்கு எதுவும் செய்யாத அரசை தட்டிக்கேட்க வேண்டாமா? தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா? என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கேட்கும் உணர்வு மக்களுக்கு வந்தாக வேண்டும் என்றும் அவர் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
புதுச்சத்திரம் அண்ணா திடலில் நீதி கேட்கும் பேரணியை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். கடலூர் மண்ணின் பெருமைகளை பட்டியலிட்டு அவர் தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது..

இந்தக்ககூட்டம் வெற்றி பெற அயராது பாடுபட்ட, ஆரவாரத்தோடு, ஆர்வத்தோடு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள எம்.ஆர்.கே., பன்னீர்செல்வத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
இங்கு வந்துள்ள கூட்டத்தை கண்ட நான் பெருமை கொள்கிறேன். இந்த கடலூர் மாவட்டம் பெருமை கொண்டது. வள்ளலார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை தந்தது இந்த பூமி. புரட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க.,வில் உங்களில் ஒருவனாக நான் மக்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.
இன்றைய தமிழகத்தில் வீடுகளை விற்க, நிலங்களை விற்க பலர் முன் வருகின்றனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. பணப்புழக்கம் முடக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வருமானம் இல்லை. என்று என்னிடம் பலரும் வருத்தம் தெரிவித்தனர். இவர்களுக்கு நான் ஆறுதல் தெரிவித்தேன்.
விவசாய பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். விவசாயம் மடிந்து போச்சு. நிலத்தை விற்கவாவது செய்வோம் என்றால் இதனை வாங்க ஆள் இல்லை. இது போன்று தமிழகம் முழுவதும் இந்த நிலைதான்.
4 ஆண்டுகள் ஆட்சியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
4 ஆண்டாக மக்களுக்கு எதுவும் செய்யாத அரசை தட்டிக்கேட்க வேண்டாமா? தமிழகமே கொந்தளிக்கும் என்ற பயம் அரசுக்கு ஏற்பட வேண்டாமா? நீதிக்கேட்கும் உணர்வு மக்களுக்கு வந்தாக வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை 16 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தித் தந்தவர் கலைஞர். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தவர் கலைஞர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications