சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: மு.க.ஸ்டாலின்
சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்; இவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சரியே என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமித்வாராய் ஆகியோர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்தனர். அத்துடன் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சொத்து குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகாலம் கழித்து தற்போது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. பொதுவாழ்க்கையில் இருப்போருக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல பாடமாக இருக்கும்.
தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில் இனி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications