குரூப் 4- தேர்வுகள்... மிக அதிக அளவில் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கும் விண்ணப்பதாரர்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை : வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிக்கான தேர்வினை தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 83 ஆயிரம் பேர் எழுத உள்ளனர் .
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவையான தகுதியான பணியாளர்களை பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது.
இதுவரை தனித்தனியாக நடந்து வந்த வி.ஏ.ஓ மற்றும் பணியாளர் தேர்வுகள் இந்த ஆண்டு முதல் ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. மொத்தம் 9351 காலி பணியிடங்களை நிரப்பும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இணையதள முடக்கம்
விண்ணப்பம் வெளியான நாளில் இருந்தே பலரும் விண்ணபித்து வந்தனர். விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 13ம் தேதி வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஓகி புயல் பாதிப்பு, டி.என்.பி.எஸ்.சி இணையதள முடக்கம் ஆகியவற்றின் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 20ம் தேதியாக மாற்றி கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

11 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் , இதற்கான தேர்வுகள் 2018 பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது. மொத்தமாக 20 லட்சத்து 83 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் பேர் பெண்கள், 9 லட்சத்து 49 ஆயிரம் ஆண்கள் மற்றும் 54 மூன்றாம் பாலித்தனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக பேர் எழுதும் தேர்வு
இதுவரை நடந்த தேர்வாணையத்தின் சார்பில் நடந்த போட்டித் தேர்வுகளிலேயே அதிக பேர் விண்ணப்பித்தது இந்த தேர்தலில் தான் என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காலநீட்டிப்பு செய்யப்பட்ட மூன்று நாட்களில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளார்கள். தேர்விற்கான ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகின்றன.

அதிகரித்துள்ள போட்டி தேர்வு மோகம்
காலியாக உள்ள 9351 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 83 பேர் விண்ணபித்து இருப்பதால், தலா ஒரு பணியிடத்திற்கு 222 பேர் போட்டியிடுகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பணி மோகம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் போட்டித் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டி வருவதால் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் கடினமாக தயாராக வேண்டிய சூழ்நிலைக்கு தேர்வு எழுதுவோர் ஆளாகி உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications