குரூப் 4- தேர்வுகள்... மிக அதிக அளவில் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கும் விண்ணப்பதாரர்கள்
அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை : வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிக்கான தேர்வினை தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 83 ஆயிரம் பேர் எழுத உள்ளனர் .
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவையான தகுதியான பணியாளர்களை பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது.
இதுவரை தனித்தனியாக நடந்து வந்த வி.ஏ.ஓ மற்றும் பணியாளர் தேர்வுகள் இந்த ஆண்டு முதல் ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. மொத்தம் 9351 காலி பணியிடங்களை நிரப்பும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இணையதள முடக்கம்
விண்ணப்பம் வெளியான நாளில் இருந்தே பலரும் விண்ணபித்து வந்தனர். விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 13ம் தேதி வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஓகி புயல் பாதிப்பு, டி.என்.பி.எஸ்.சி இணையதள முடக்கம் ஆகியவற்றின் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 20ம் தேதியாக மாற்றி கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

11 லட்சம் பெண்கள் விண்ணப்பம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் , இதற்கான தேர்வுகள் 2018 பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது. மொத்தமாக 20 லட்சத்து 83 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் பேர் பெண்கள், 9 லட்சத்து 49 ஆயிரம் ஆண்கள் மற்றும் 54 மூன்றாம் பாலித்தனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக பேர் எழுதும் தேர்வு
இதுவரை நடந்த தேர்வாணையத்தின் சார்பில் நடந்த போட்டித் தேர்வுகளிலேயே அதிக பேர் விண்ணப்பித்தது இந்த தேர்தலில் தான் என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காலநீட்டிப்பு செய்யப்பட்ட மூன்று நாட்களில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளார்கள். தேர்விற்கான ஏற்பாடுகள் துரித கதியில் செய்யப்பட்டு வருகின்றன.

அதிகரித்துள்ள போட்டி தேர்வு மோகம்
காலியாக உள்ள 9351 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 83 பேர் விண்ணபித்து இருப்பதால், தலா ஒரு பணியிடத்திற்கு 222 பேர் போட்டியிடுகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பணி மோகம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் போட்டித் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டி வருவதால் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் கடினமாக தயாராக வேண்டிய சூழ்நிலைக்கு தேர்வு எழுதுவோர் ஆளாகி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications