ஏ.டி.எம். மூடல்... சம்பளத்தை வங்கியில் எடுக்க முடியாமல் பரிதவிக்கும் தனியார் ஊழியர்கள் !
சம்பளத்தை வங்கிகளில் எடுக்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் சிரமப்பட்டனர்.
சென்னை: சென்னையில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் எடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் போதுமான புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வங்கிகளுக்கு வராததால்,சில்லறை கிடைக்காமல் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன.இவற்றுக்கு சில்லறை தர வர்த்தகர்கள் மறுப்பதால்,2000 ரூபாய் நோட்டை பயன்படுத்த மக்கள் யாரும் தயாராக இல்லை.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், ஓய்வூதிய தொகையான ரூ.1,300 கோடியை தமிழக அரசு வங்கியில் நேற்று டெபாசிட் செய்தது. இந்த பணத்தை எடுக்க நேற்று காலை 10 மணிக்கே வங்கிகளை அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓய்வூதியதாரர்களும் இன்று வங்கிக்கு வந்து நீண்டநேரம் காத்து நின்று பணத்தை எடுத்து சென்றனர்.
அதேபோன்று இன்று 1ந் தேதி என்பதால் ஐ.டி நிறுவனங்கள் போன்ற தனியார் பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. அந்த பணத்தை எடுக்க தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் தனியார் ஊழியர்கள் திரண்டனர். இதனால், அனைத்து வங்கிகளிலும் இன்று காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், அவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே வங்கிகளில் பணம் வழங்கப்பட்டது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications