நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்... அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள ஸ்டாலின், அடுத்த கட்ட பயணத்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார்.

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா கற்பனையான கதைகளை கூறி நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக மக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் இந்த பயணம் கவர்ந்துள்ளது. அவரது மனதில் நமக்கு நாமே பயணம் ஆழமாக பதிந்துள்ளது மகிழ்ச்சி.
சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பேன் என்று ஜெயலலிதா கூறி இருப்பது அதிமுகவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி. ஊழல் மிகுந்த இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட கூடிய பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். செயலற்ற ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் 2016ம் ஆண்டு அமையும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்த வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரை விடுபட்ட 22 தொகுதிகளில் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications