நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்... அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள ஸ்டாலின், அடுத்த கட்ட பயணத்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார்.

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா கற்பனையான கதைகளை கூறி நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக மக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் இந்த பயணம் கவர்ந்துள்ளது. அவரது மனதில் நமக்கு நாமே பயணம் ஆழமாக பதிந்துள்ளது மகிழ்ச்சி.
சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பேன் என்று ஜெயலலிதா கூறி இருப்பது அதிமுகவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி. ஊழல் மிகுந்த இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட கூடிய பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். செயலற்ற ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் 2016ம் ஆண்டு அமையும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்த வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரை விடுபட்ட 22 தொகுதிகளில் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு!












Click it and Unblock the Notifications