சென்னை அருகே நக்சலைட்டுகள் ஊடுருவல்? தமிழக-ஆந்திர எல்லையில் தீவிர கண்காணிப்பு
தமிழக ஆந்திர எல்லையோர வனப்பகுதிகள் வழியாக சென்னை அருகே நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. . இதனால் தமிழக ஆந்திர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள பூண்டி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீசார் தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக - ஆந்திர எல்லையில், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 14 வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் எல்லையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், சுதந்திர தினத்தையொட்டி நக்சலைட்டுகளை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள நக்சல் அமைப்பினர், தமிழக வனப்பகுதிக்குள் பதுங்க உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இருமாநில எல்லையோர வனப்பகுதி மற்றும் மலைப் பகுதிகளில், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க, தமிழக அரசு கடந்த டிசம்பர் 5ம் தேதி தீவிர நக்சல் தடுப்பு தனிப்பிரிவை உருவாக்கியது. அதன் மூலம் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்திலும் தமிழக - ஆந்திர எல்லையான பூண்டி காப்புக்காடு, குடியம் மலைப்பகுதி, அல்லிக்குழி, பிளேஸ்பாளையம், ராஜபாளையம், சென்றாயன்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் தொடங்கி பள்ளிப்பட்டு வரை வனப்பகுதி உள்ளன.
இங்கு, மான்கள், முயல்கள், குள்ளநரி, முள்ளம்பன்றி, காட்டுபன்றி, உடும்பு மற்றும் அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் வருவதாலும், காப்புக் காட்டில் செம்மரங்கள் கடத்தப்படுவதாலும், நக்சலைட்டுகள் யாராவது காட்டிற்குள் பதுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வனப்பகுதிகளில், திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 13 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்று கண்காணித்து வருகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications