தயார் நிலையில் 9 தேசிய பேரிடர் குழுக்கள்... மீட்பு உபகரணங்களும் ரெடி
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க 9 தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களை சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடசென்னை பகுதியில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ளோரையும், வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களையும் மீட்பதற்காக சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய முகாம்களைச் சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் உள்ளனர். மீட்பு பணிகளுக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications