விருதுநகர் அருகே குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் - பெற்றோர் பீதி
விருதுநகர் அருகே மர்மக்காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதால் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
விருதுநகர்: விருதுநகர் அருகே வேகமாக பரவி வரும் மர்மக் காய்ச்சாலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள குலசேகரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மஞ்சம்பட்டி கிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் சிறுவர்கள் விமல்ராஜ் , சீதாலட்சமி , பாக்யா , அழகுராஜா , வசந்தகுமார் ஆகியோர் மர்மக்காய்ச்சல் தாக்கி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் நோய் ஏற்பட்டு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இப்பகுதியில் சுற்றுப்புற சீர்கேடு நிலவி வருகிறது.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். காய்ச்சல் பாதிப்பு குறித்து தகவல் அறிந்த மருத்துவ அதிகாரி ஜெயக்குமாரி ஹேமலதா மஞ்சம்பட்டி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications