போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி ஊரில் ஒரு ரேசன் கார்டுக்கு ரூ. 60000 விநியோகம்
வருமான வரித்துறையினர் வலையில் சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் ஊரில் ஒரு குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர்: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குப் பின்னர், கறுப்பு பணம், கள்ள நோட்டு பதுக்குபவர்களை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது 132 கோடி ரூபாய்,177 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுக்களாக 35 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக சேகர் ரெட்டி எப்படி மாற்றினார் என்பது பற்றி 50 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேகர் ரெட்டியின் சொந்த ஊரான காட்பாடியை அடுத்த தொண்டான்துளசியில், கிராம மக்களுக்கு ஒரு ரேசன்கார்டுக்கு தலா.ரூ.60 ஆயிரம் ரூபாய், 1200 பேருக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள பணத்தை வட்டியில்லாமல் 4 தவணைகளாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications