ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: நிர்வாக வசதிக்காக ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள சந்தை மைதானத்தில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி எம்ஜிஆர் திருவுருவப்படத்தை திறந்துவைத்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து 113 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். 112 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் பேசினார். அப்போது, நிர்வாக வசதிக்காக ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
போளூர், செங்கம், கலசப்பாக்கம் கிராமங்களை இணைத்து ஜமுனாமரத்தூரை புதிய வட்டமாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செண்பகத்தோப்பு அணை மதகுகள் ரூ.9.80 கோடி செலவில் சீரமைக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications