தினகரனுக்கு மறுபடியும் "தொப்பி"யைத் தராதீங்க.. தமிழிசை ஏன் இப்படிச் சொல்கிறார்?
தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ள டிடிவி தினகரன் அணியினருக்கு தொப்பி சின்னம் வழங்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அச்சமயம் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்தால் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியபோது அதை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதையடுத்து ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிட்ட மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும், எடப்பாடி அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு தொப்பி சின்னமும் வழங்கப்பட்டது. இந்த இரு சின்னங்களையும் மக்களுக்கு பரீட்சயமாக்கவும் பிரபலப்படுத்தவும் பாடாதபாடுப்பட்டனர்.

தேர்தல் ரத்து
ஆர்.கே.நகருக்குள்பட்ட இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு இருந்த போதிலும் அருகில் உள்ள மளிகைக் கடைகளில் டோக்கன் கொடுத்து பொருள்கள் வழங்கப்பட்டன. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு
இதனிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக ஆலோசனைக் கூட்டம் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழிசையின் பலே லாஜிக்
கூட்டம் முடிந்த பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது முதல் கூட்டம் தான் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இதன் முடிவை நாங்கள் மத்திய தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலை எப்படி அணுகுவது?, எதிர்கொள்வது? என்ற முடிவுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை. அப்படி இருக்கும்போது யார் வேட்பாளர் என்பதை இப்போது சொல்லமுடியாது.

பணப்புழக்கம்
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவருக்கு கடந்தமுறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் வழங்கக்கூடாது. ஏனென்றால் அந்த தொப்பி சின்னத்தை வைத்துதான் அங்கு ஊழலே ஆரம்பித்தது. மிக அதிகப்படியான பணம் அந்த தொப்பியை பிரபலப்படுத்துவதற்காக தான் நடந்தது. மீண்டும் அவருக்கு தொப்பி சின்னத்தை கொடுக்கும்போது, பழைய முறைகேடுகளின் தொடர்பாகவே தான் இருக்கும். இதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகத்தை நான் வெளிப்படுத்துகிறேன் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications