எந்தப் பாலிலும் கலப்படம் இல்லை.. உணவு பாதுகாப்புத்துறை!
எந்தப் பாலிலும் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: எந்தப் பாலிலும் கலப்படமோ தரக்குறைவோ இல்லை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 62 பால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் குற்றம்சாட்டினார். தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் கெமிக்கல் கலக்கப்படுவதாக கூறினார்.
இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ள உள்ளதாகவும் குண்டை தூக்கிப் போட்டார். தனியார் பால் மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு
அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. அமைச்சர் கூறுவதில் உண்மையில்லை என்றும் பாலில் எந்த கலப்படமும் செய்யப்படுவதில்லை என்றனர்.

தூக்கில் தொங்குவேன்
ஆனாலும் தனது குற்றச்சாட்டில் விடாப்படியாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலப்படம் செய்யப்படுவது நிரூபிக்கப்பட்டவுடன் தனியார் பால் நிறுவனங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பாலில் கலப்படம் இல்லை என நிரூபிக்கப்பட்டால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் தூக்கில் தொங்குவேன் என்றும் கூறினார்.

தரம் குறைவு மற்றும் கலப்படம் இல்லை
இந்நிலையில் தரப்பரிசோதனை முகாமில் 62 பால் மாதிரிகளை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் எந்த ஒரு பால் மாதிரியிலும் தரம் குறைவு மற்றும் கலப்படம் இல்லை என தெரியவந்துள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

சோப்பு ஆயில்..
அண்மையில் மதுரையில் நடத்தப்பட்ட பால் பரிசோதனை முகாமில் சில தனியார் பால் பாக்கெட்டுகளில் சோப்பு ஆயில் கலக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தரபரிசோதனை முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில் பாலில் கலப்படம் இல்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications