கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை - வானிலை மையம் ஜில் தகவல்
தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு யைம இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை புறநகரில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்றுமுதல் தீவிரமடைய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

பருவமழை தீவிரம்
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை ஒருவாரம் தாமதமாக தொடங்கியுள்ளது. இருப்பினும், இயல்பைவிட அதிகம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அணைகளில் நீட்மட்டம்
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்திருந்தாலும் கூட, பெரும்பாலான மாவட்டங்களில் நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவத்தில் அதிகளவு மழை கொடுக்கும் என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கொட்டிய கனமழை
சென்னையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. திடீரென வானம் இருண்டு மழை மேகம் சூழ்ந்தது. தொடர்ந்து அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழையுடன் சேர்த்து வெயிலும் அடித்தது. அதேபோல், பல்லாவரம், மாங்காடு, பம்மல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று காலை பலத்த மழை பெய்தது.

கடலோர மாவட்டங்களில் கனமழை
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், காற்றழுத்த தாழ்வுநிலையால் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வெள்ளம், புயல் பற்றி வதந்தி
பருவமழை தாமதத்துக்கும், மழை அளவு குறையும் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 4 நாட்கள் மற்றும் 5 நாட்களுக்கு முன்பாக மட்டுமே கனமழை பற்றி கணிக்க முடியும். வெள்ளம் வரும், புயல் வரும், சென்னை மூழ்கிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications