சசிகலா போல ஜெ. நாற்காலியில் அமராத ஓ.பன்னீர்செல்வம்... பழைய அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றார்
மறைந்த ஜெயலலிதா முதல்வராக அமர்ந்த நாற்காலியில் அமராமல் தன்னுடைய பழைய அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றார் ஒ. பன்னீர்செல்வம்.
சென்னை: தலைமை செயலகத்தில் உள்ள தனது பழைய அறையிலேயே முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் நேற்று பொறுப்பேற்றார். அவர் நிதியமைச்சராக இருந்த அதே அறையில் இருந்து முதல்வராக பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவையொட்டி, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்று 4 நாட்கள் ஆகியும் தலைமை செயலகம் வந்து முதல்வராக பொறுப்பேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்ததும் சரியாக 12.30 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நிதியமைச்சராக இருந்த அறைக்கே சென்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னைக் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வருக்கான தனி அறை உள்ளது. அந்த அறையில்தான் தற்போது மறைந்த ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றினார். இதே போன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் அனைவரும் இந்த அறையில் இருந்துதான் பணியாற்றி உள்ளனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவையொட்டி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தான் நிதியமைச்சராக பணி செய்த அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அவரது அறையின் நுழைவாயிலில் இருந்த நிதியமைச்சர் என்ற பெயர் பலகை அகற்றப்பட்டு, "ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர்" என்று புதிய பெயர் பலகை மாற்றப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதும் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்கள் பணியாற்றினார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் அறைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications