சசிகலா போல ஜெ. நாற்காலியில் அமராத ஓ.பன்னீர்செல்வம்... பழைய அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றார்
மறைந்த ஜெயலலிதா முதல்வராக அமர்ந்த நாற்காலியில் அமராமல் தன்னுடைய பழைய அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றார் ஒ. பன்னீர்செல்வம்.
சென்னை: தலைமை செயலகத்தில் உள்ள தனது பழைய அறையிலேயே முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் நேற்று பொறுப்பேற்றார். அவர் நிதியமைச்சராக இருந்த அதே அறையில் இருந்து முதல்வராக பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவையொட்டி, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்று 4 நாட்கள் ஆகியும் தலைமை செயலகம் வந்து முதல்வராக பொறுப்பேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்ததும் சரியாக 12.30 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நிதியமைச்சராக இருந்த அறைக்கே சென்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னைக் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வருக்கான தனி அறை உள்ளது. அந்த அறையில்தான் தற்போது மறைந்த ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றினார். இதே போன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் அனைவரும் இந்த அறையில் இருந்துதான் பணியாற்றி உள்ளனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவையொட்டி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தான் நிதியமைச்சராக பணி செய்த அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அவரது அறையின் நுழைவாயிலில் இருந்த நிதியமைச்சர் என்ற பெயர் பலகை அகற்றப்பட்டு, "ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர்" என்று புதிய பெயர் பலகை மாற்றப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதும் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்கள் பணியாற்றினார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் அறைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications