எத்தலீன் வாயுவால் பழுக்க வைக்கப்பட்ட 10,500 கிலோ மாம்பழங்கள் கோயம்பேட்டில் பறிமுதல்
செயற்கை மாம்பழங்கள் 10,500 பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 10,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாம்பழங்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, பின்பு அதில், கார்பைட், எத்தலீன் போன்றவற்றை பயன்படுத்தி செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது இயற்கை முறையில் மாம்பழம் 10 நாட்களில் பழுக்கிறதென்றால் எத்தலீன் வாயுவினால் பழுக்க வைத்தால் 5 நாட்களில் பழுத்துவிடுமாம்.

சிலர் கார்பைடு கற்கள் மூலமும் பழங்களை பழுக்க வைத்து விற்கிறார்கள். எப்படி பார்த்தாலும் அவை எல்லாமே இயற்கைக்கு முரணானதே. இந்த மாம்பழங்களில் எந்த சத்துக்களும் இருக்காது. உடலுக்கும் கெடுதல் வேறு. தித்திப்பாக வேண்டுமானால் அதிகமாக இருக்கும். இதனை சாப்பிட்டால் புற்றுநோய் கூட வர வாய்ப்புண்டு. அதனால் இதுபோன்று கலப்படம் செய்து விற்கப்படும் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தேடி கண்டறிந்து அழித்தும் தடுத்தும் வருகிறார்கள்.
அதுபோல கலப்படம் செய்த பழங்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனால் 22 பேர் கொண்ட குழு ஒன்று மார்கெட்டில் திடீர் சோதனையில் இன்று ஈடுபட்டது. அப்போது ரசாயனம் கலந்த 10.2 டன் எடை கொண்ட மாம்பழங்களை அதிகரிகள் பறிமுதல் செய்தனர். அதாவது 10,500 கிலோ மாம்பழங்கள் என சொல்லப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ஏழரை லட்சம் என போலீசார் கூறுகின்றனர்.
மாம்பழங்களை பழுக்க வைக்க பயன்படும் 5 லிட்டர் எத்தலீனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையெல்லாம் மக்கள் தலையில் கட்ட பார்த்த அக்கடை உரிமையாளர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். அத்துடன், இனியும் இதுபோல ரசாயனம் கலந்து பழங்களை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications