கலாம் பெயரைக் கெடுக்காத எந்த செயலையும் ஏற்கலாம்... "ஒன்இந்தியா - தமிழ்" வாசகர்கள் கருத்து!
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமை இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் உள்ளவர்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.
கலாம் நம்மை விட்டு மறைந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துள்ளது. இதே நாளில்தான் கடந்த ஆண்டு அவர் ஷில்லாங் நகரில் மாணவர்களிடையே உரையாற்றச் சென்றிருந்தபோது மரணமடைந்தார்.
இந்த நிலையில் அப்துல் கலாமை எப்படி நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த கருத்து குறித்த ஒரு பார்வை...

பிரமாண்ட கல்விக் கூடம் அமைக்கலாம் 16%
அப்துல் கலாம் பெயரில் பிரமாண்டக் கல்விக் கூடம் அமைக்கலாம் என்று வாக்களித்தவர்களில் 16 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோவுக்கு அவர் பெயர் சூட்டலாம் 13%
இந்திய அறிவியல் ஆய்வுக் கழகமான இஸ்ரோவையும், கலாமையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த வகையில் இஸ்ரோவுக்கு அவரது பெயரைச் சூட்டலாம் என்று 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அறிவியல் ஆய்வு கழகம் நிறுவலாம் 11%
அப்துல் கலாம் பெயரில் மிகப் பெரிய அறிவியல் ஆய்வுக் கழகம் அமைக்கலாம் என்பதற்கு 11 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மிகப் பெரிய நினைவிடம் கட்டலாம் 2%
கலாமுக்கு நினைவிடம் என்ற பெயரில் ஒரு கட்டடத்தைக் கட்டுவதில் பலருக்கும் உடன்பாடு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பதிலுக்கு 2 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்திருந்தனர்.

கலாம் பெயரில் விருது தரலாம் 5%
அப்துல் கலாம் பெயரில் ஒரு உயரிய விருதை ஏற்படுத்தி அந்த விருதினை தரலாம் என்று 5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தேவி போல சிலை அமைக்கலாம் 3%
அப்துல் கலாமுக்கு சிலைகள் என்றாலே பிடிக்காது. அதேபோலத்தான் கலாமை விரும்புபவர்களுக்கும் அவரை சிலையாக்கி முடக்க விருப்பம் இல்லை. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போல வைக்கலாம் என்ற பதிலுக்கு 3 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர் பெயரைக் கெடுக்காத எந்த செயலும் நல்லதே! 51%
இதையெல்லாம் விட முக்கியமானது நமது வாசகர்கள் தேர்ந்தெடுத்துள்ள கடைசி ஆப்ஷன்தான். அப்துல் கலாமின் பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே போதும் என்பதே மக்களின் தீர்ப்பாக உள்ளது. இதற்குக் காரணம், கடந்த ஒரு வருடத்தில் கலாம் நினைவிடம் தொடர்பாக நடந்த குழப்பங்களைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போய் விட்டதால்தான். கலாம் பெயரைக் கெடுக்காத எந்த செயலும் நல்லதே என்று 51 சதவீதம் பேர் அடித்துக் கூறி விட்டனர்.
அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications