திறந்தவெளி சிறை அமைக்க நடவடிக்கை: உள்துறை செயலருக்கு உத்தரவு!
திறந்தவெளி சிறை அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: திறந்தவெளி சிறை அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திறந்தவெளி சிறை அமைக்க வேண்டும் என ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து மாவட்டங்களிலும் திறந்தவெளி சிறை அமைப்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications