2 கண்டிஷன்தான்.. ஏத்துக்கிட்டா 24 மணி நேரத்தில் இணையலாம்.. மாஃபா பாண்டியராஜன் தகவல்!
சென்னை: எங்களிடம் இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான் உள்ளன. அதை நிறைவேற்றினால் 24 மணி நேரத்தில் அதிமுக ஒன்றுபடும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த பாண்டியராஜன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகள் வெளிப்படையானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் தரப்பில் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தினகரன் பக்கம் 29 பேர் அணிவகுத்துள்ளனர். வெறும் 93 பேர் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர். அதாவது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது எடப்பாடி அரசு.

ஓ.பி.எஸ். அவசர ஆலோசனை
இந்த சிக்கலான நிலையில் எடப்பாடி அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நிலை வந்தால் என்ன மாதிரியான உத்தியை கையாளுவது என்று விவாதிப்பதற்காக இன்று ஓ.பி.எஸ். தரப்பு ஆலோசனையில் ஈடுபடுகிறது.

என்ன செய்யலாம்
சென்னையில் உள்ள ஓ.பி.எஸ். வீ்ட்டில் வைத்து இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது. சட்டசபைக் கூட்டத்தில் எப்படி செயல்படுவது, அதற்கு முன்பாகவே தினகரன் தரப்பால் எடப்பாடி அரசுக்குப் பிரச்சினை வருமா, வந்தால் எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

கவிழாது - பாண்டியராஜன்
இந்த நிலையில் மாஃ பாண்டியராஜன் தந்திக்கு அளித்துள்ள பேட்டியில், 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பதால், அவர்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கருதமுடியாது. டி.டி.வி.தினகரனை பார்த்த எம்.எல்.ஏ.க்கள் அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை.

2 கோரிக்கைதான்
எங்களை பொறுத்தவரை 2 நிபந்தனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அதாவது சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். மற்றொன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான். இந்த நிபந்தனைகளை எளிதில் நிறைவேற்றும் காலம் தற்போது நெருங்கிவிட்டது.

24 மணி நேரத்தில் சேர முடியும்
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் அதிமுகவில் பிளவுப்பட்ட 2 அணிகளும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று பாண்டியராஜன் கூறியுள்ளார். இவர்களின் கோரிக்கையை எடப்பாடி ஏற்றாலும் கூட அவர்களிடம் வெறும் 105 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பார்கள். எனவே ஆட்சியைக் காப்பாற்றுவது கடினம். எனவே ஆட்சியைக் காப்பாற்ற விரும்பினால் எடப்பாடி அரசு, தினகரன் காலில்தான் போய் விழ வேண்டும் என்பதே நிதர்சனம்
இதற்குப் பேசாமல் ராஜினாமா செய்து விட்டு அத்தனை பேரும் மக்கள் காலில் விழுந்து விடலாம்.. பெஸ்ட்!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications