பச்சமுத்துவின் ஜாமீன் மனு நிராகரிப்பு - 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும தலைவரும் ஐ.ஜே.கே. கட்சி தலைவருமான பச்சமுத்துவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

வியாழக்கிழமை மாலை பச்சமுத்து விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
சுமார் 15 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று மதியம் 12 மணிக்கு கைது செய்தனர். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மதியம் 3.30 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவச் சான்றிதழ் கேட்கப்பட்டது. அப்போது ஒரு வாரத்துக்கு முன் இருதயத்தில் ஆஞ்சியோ ஆபரேசன் செய்ததாக பச்சமுத்து கூறினார். இதனால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்யப்பட்டது. அந்த வசதி ராயப்பேட்டை மருத்துவமனையில் இல்லாததால், அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனையில் அவர் முழு உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது. அந்த சான்றிதழைப் பெற்ற போலீசார் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு ஏற்கனவே பரிசோதித்த டாக்டர்களிடம் மீண்டும் சான்றிதழ் பெற்றனர். அதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர்.
சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்னிலையில் இரவு 8.35 மணிக்கு பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அவரை செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவு 12.30 மணிக்கு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பச்சமுத்து அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியானதை அடுத்து, நீதிமன்ற வளாகம் பரபரப்புக்கு உள்ளானது.எஸ்ஆர்எம் கல்வி குழுமத் தலைவரான பச்சமுத்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications