ஆசிரியைகளை கைது செய்யவும் அரசே.. உங்க பணம் வேண்டாம்.. தற்கொலை செய்த 4 மாணவிகளின் பெற்றோர் தடாலடி
கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
Recommended Video

வேலூர்: கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.இதில் மாணவிகள் அளித்த தகவலின்படி சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிவாரணம் அறிவித்த அரசு
இந்நிலையில் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அண்மையில் அறிவித்தார்.
அதன்படி நிவாரண தொகையை வழங்குவதற்காக 4 மாணவிகளின் பெற்றோரை நெமிலி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

பெற்றோரிடம் விசாரணை
அப்போது மாணவிகளின் தற்கொலை குறித்து பெற்றோரிடம் சப்கலெக்டர் வேணு சேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு வழங்கிய 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை சப்கலெக்டர் அவர்களிடம் வழங்கினார்.

கைது செய்ய கோரிக்கை
ஆனால் அதனை பெற்றோர்கள் வாங்க மறுத்துவிட்டனர். தங்கள் குழந்தைகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றினால்
மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் சப்கலெக்டரிம் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளிள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நிவாரண தொகையை பெற்றுக்கொள்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications