ஆசிரியைகளை கைது செய்யவும் அரசே.. உங்க பணம் வேண்டாம்.. தற்கொலை செய்த 4 மாணவிகளின் பெற்றோர் தடாலடி
கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
Recommended Video

வேலூர்: கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.இதில் மாணவிகள் அளித்த தகவலின்படி சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிவாரணம் அறிவித்த அரசு
இந்நிலையில் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அண்மையில் அறிவித்தார்.
அதன்படி நிவாரண தொகையை வழங்குவதற்காக 4 மாணவிகளின் பெற்றோரை நெமிலி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

பெற்றோரிடம் விசாரணை
அப்போது மாணவிகளின் தற்கொலை குறித்து பெற்றோரிடம் சப்கலெக்டர் வேணு சேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு வழங்கிய 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை சப்கலெக்டர் அவர்களிடம் வழங்கினார்.

கைது செய்ய கோரிக்கை
ஆனால் அதனை பெற்றோர்கள் வாங்க மறுத்துவிட்டனர். தங்கள் குழந்தைகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றினால்
மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் சப்கலெக்டரிம் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளிள் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் நிவாரண தொகையை பெற்றுக்கொள்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications