அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை.. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்
கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படாததைக் கண்டித்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கீழ்முரசுப்பட்டி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களான கீழ்முரசுப்பட்டி, மேல் முரசுப்பட்டி, கும்மனூர், ஒசஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 7 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் உள்ளதாகவும், ஆனால் கடந்த மாதம் வரை 4 ஆசிரியர்களே பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் 3 பேர் கடந்த அக்டோபர் மாதம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, 200 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியை மட்டும் பணியாற்றி வருகிறார். அந்த ஆசிரியை, சூளகிரியிலிருந்து தினமும், இந்த பள்ளிக்கு வந்து செல்கிறார். ஆசிரியர்களின் பற்றாக்குறையால் கடந்த 15 நாட்களாக மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் எனக் கோரி மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி ஊராட்சி தலைவர் மாதையன் மற்றும் ஊர் பெரியவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications