தமிழகத்தில் டெங்கு காய்ச்சலே இல்லை.. எல்லோரும் நல்லா இருக்காங்க: அமைச்சர் கருப்பண்ணன்
திருப்பதி ஏழுமலையான் அருளால் தமிழகத்தில் அனைவரும் நலமுடன் இருப்பதாக அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார்.
திருப்பதி: டெங்கு காய்ச்சல் எல்லாம் தமிழ்நாட்டில் எதுவுமில்லை, தமிழ்நாட்டில் எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஒருவரே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் எதுவுமேயில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அமைச்சர் கே.சி. கருப்பணன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

அமைச்சருக்கு லட்டு பிரசாதம்
அமைச்சருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலிக்கு வெளியே செய்தியாளர்களிடம் அமைச்சரிடம் டெங்கு பாதிப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றார்.

ஏழுமலையான் அருளால் நலம்
தமிழ்நாட்டில் ஏழுமலையான் அருளால் எல்லோரும் நலமாக இருக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு வேகமாக சென்றார் அமைச்சர் கே.சி. கருப்பணன்.

நொய்யல் ஆற்றில் சோப்புநுரை
இதே அமைச்சர்தான் நொய்யல் ஆற்றில் சோப்பு நுரைதான் பொங்குகிறது. மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் பொங்கிய நுரை என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications