கலாம் நினைவிடத்தில் இன்றும் மக்கள் கூட்டம்.. திருமண் பூசி சபதம் செய்யும் மாணவர்கள்
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும், அப்துல் கலாம் புதைக்கப்பட்ட இடத்தில், இன்றும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாணவர்கள் அவர் புதைக்கப்பட்ட இடத்தின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசி அவரது கனவுகளை நிறைவேற்ற சபதம் செய்து செல்கின்றனர்.
அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று மாலை வரை விஐபிகள் பலரும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்ததால் பொதுமக்கள் எளிதாக நினைவிடத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் நேற்று இரவு முதல் பொதுமக்கள் அங்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

கலாம், புதைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். வருவோர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், அவர் படித்த துவக்கப் பள்ளி ஆகியவற்றையும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இரவு நேரத்திலும் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை தங்கச்சிமடம் ஊராட்சி செய்துள்ளது. கலாமின் நினைவிடத்தில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மாணவ, மாணவிகள், இளைஞர்கள், கலாம் நினைவிட மண்ணை எடுத்து நெற்றியில் பூசி, அவரது கனவை நனவாக்கி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக சபதம் செய்தனர்.
பெங்களூரில் இருந்து வந்திருந்த மாணவர் சதீஷ், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர், ராஜசேகர், மாணவி உமா தேவி ஆகியோர் கூறுகையில், "மாணவர், இளைஞர்கள் மத்தியில் லட்சிய கனவு காண சொல்லி கலாம் எழுச்சியூட்டினார்.
அந்த கனவு எங்கள் மனதில் விதையாக விதைக்கப்பட்டு, வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. எதிர்காலத்தில் ஆலவி ருட்சமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கலாம் புதைக்கபடவில்லை, விதைக்கப்பட்டுள்ளார்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications