குடிதண்ணீரில் “குட்டி மீன்கள்” – அதிர்ச்சியில் பழனி மக்கள்!
பழனி: பழனியில் குடிநீரில் திடீரென்று மீன்கள் வந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பழனி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
போதிய மழை இல்லாததால் இந்த 2 அணைகளிலும் தற்போது தண்ணீர் குறைவாகவே உள்ளது.

கலங்கி வரும் குடிநீர்:
இதனால் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே வருகிறது.

6 நாட்களுக்கு ஒரு முறை:
தற்போது நகருக்கு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரும் பல இடங்களில் பொதுமக்களுக்கு போதிய அளவு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

குடிநீரில் மீன்கள்:
நேற்று மாலை அடிவாரம் திலகர் வீதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிதண்ணீரில் சிறிய அளவிலான கெண்டை மீன்கள் கலந்து வந்தன. முதலில் இந்த தண்ணீரை பார்க்காமல் குடித்த மக்களுக்கு குமட்டல் வந்தது.

நீர்மட்டம் குறைவு:
தண்ணீர் பிடித்து தெளிந்த பிறகு பார்த்தபோதுதான் நீரில் மீன்குஞ்சுகள் மிதந்ததை பொதுமக்கள் கவனித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் அணைகளில் தற்போது நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது.

சுத்திகரிப்பு நிலையம்:
இதனால் சிறிய அளவிலான மீன்கள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பாலாறுஅணையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை. அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி இதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளோம்.

நோய் தொற்று பாதுகாப்பு:
பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் குடிநீரில் மருந்துகள் கலக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் மக்கள்:
பெரும்பாலான தெருக்களில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இதுபோல மீன்குஞ்சுகள் கலந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications