குடிதண்ணீரில் “குட்டி மீன்கள்” – அதிர்ச்சியில் பழனி மக்கள்!
பழனி: பழனியில் குடிநீரில் திடீரென்று மீன்கள் வந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பழனி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
போதிய மழை இல்லாததால் இந்த 2 அணைகளிலும் தற்போது தண்ணீர் குறைவாகவே உள்ளது.

கலங்கி வரும் குடிநீர்:
இதனால் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே வருகிறது.

6 நாட்களுக்கு ஒரு முறை:
தற்போது நகருக்கு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரும் பல இடங்களில் பொதுமக்களுக்கு போதிய அளவு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

குடிநீரில் மீன்கள்:
நேற்று மாலை அடிவாரம் திலகர் வீதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிதண்ணீரில் சிறிய அளவிலான கெண்டை மீன்கள் கலந்து வந்தன. முதலில் இந்த தண்ணீரை பார்க்காமல் குடித்த மக்களுக்கு குமட்டல் வந்தது.

நீர்மட்டம் குறைவு:
தண்ணீர் பிடித்து தெளிந்த பிறகு பார்த்தபோதுதான் நீரில் மீன்குஞ்சுகள் மிதந்ததை பொதுமக்கள் கவனித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் அணைகளில் தற்போது நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது.

சுத்திகரிப்பு நிலையம்:
இதனால் சிறிய அளவிலான மீன்கள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பாலாறுஅணையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை. அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி இதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளோம்.

நோய் தொற்று பாதுகாப்பு:
பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் குடிநீரில் மருந்துகள் கலக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் மக்கள்:
பெரும்பாலான தெருக்களில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இதுபோல மீன்குஞ்சுகள் கலந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications